Thursday, 23 July 2015

500A AND M18G BUS LETTER TO tkm












                   C M W A /B U S /2015                                                          26-7-2015                                                 
                   Sir,
                                    பொருள் : 500A மற்றும் M 18G ரூட் டில் சிறிய மாற்றம் பற்றி

             சாதரணமாக ஒரு பஸ் எந்த ரூட் வழியாக செல்கிறதோ ,அதே ரூட்டில் தான் திரும்பி ரிட்டர்ன் ஆகும்.
            ஆனால் ஹஸ்தினாபுரம் to செங்கல்பெட் செல்லும் 500A மற்றும் ஹஸ்தினாபுரம் to கூடுவாஞ்சேரி செல்லும் M 18G ஆகிய பஸ்  ஹஸ்தினபுரத்தில் இருந்து செல்லும் போது சிட்லபாக்கம் பேரூராட்சி, சானடோரியம் மேம்பாலம் வழியாக செல்கிறது .ஆனால் செங்கல்பெட்டில் இருந்து .ஹஸ்தினாபுரம், கூடுவாஞ்சேரி to ஹஸ்தினாபுரம் வரும் போது
M I T  மேம்பாலம்,R P ரோடு வழியாக ஹஸ்தினாபுரம் சென்று அடைகிறது .இதற்கு முக்கிய காரணம், MEPZ  அருகில் G S T ரோட்டில் பயணிகளுக்கு சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைத்த பிறகு, பேருந்துகள் வலது புறம் திரும்பி  சானடோரியம் மேம்பாலம்  செல்லும்வழியை அடைத்துவிட்டதுதான். இதனால் சிட்லபாக்கம் பேரூராட்சி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறும் சிட்லபாக்கம் பயணிகள் ஹஸ்தினாபுரம் சென்று அங்கிருந்து வேறு பஸ் மூலம் சிட்லபாக்கம் வர வேண்டயுள்ளது .இதனால் கூடுதல் நேரம் கூடுதல் பணம் செலவாகிறது.
               எனவே 500A மற்றும் M 18G பஸ்களை MIT மேம்பாலம் ஏறி U TURN அடித்து சானடோரியம் மேம்பாலம்  வழியாக வரச் செய்து  ஹஸ்தினாபுரம் to செங்கல்பெட் ,ஹஸ்தினாபுரம் to கூடுவாஞ்சேரி போகும்போதும், செங்கல்பெட்டில் to ஹஸ்தினாபுரம்,கூடுவாஞ்சேரி to ஹஸ்தினாபுரம் வரும்போதும் சிட்லபாக்கம் பேரூராட்சி வழியாக செல்லும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் .( தற்போது S 8 பஸ்சும் ,. அண்ணா பேருந்து நிலையதிலிருந்து  (MEPZ BUS STAND ) கிளம்பும் அனைத்து தாம்பரம் மார்க்கம் பேருந்துகளும் MIT மேம்பாலம் ஏறி U TURN அடித்து செல்கின்றன.எனவே 500A மற்றும் M 18G பஸ்கள் இம்மாதிரி செல்ல எந்த தடையும் இல்லை .).
            
   
        மேற் கூறிய சிறிய மாற்றத்தால்  கிடைக்கும் நன்மைகள் :
   1.பஸ் ரூட் 500A ,M18G   போகும்போதும், வரும்போதும்ஒரே வழியாக செல்லும்.

   2.சிட்லபாக்கம் பயணிகளின் நேரம் ,பணம் விரயம் ஆகாமல் தவிர்க்கலாம்.

   3.இதனால் ஹஸ்தினாபுரம் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை .

                        எனவே தக்க நடவடிக்கை எடுத்து 500A மற்றும் M 18G ரூட்டை மேற்கண்டவாறு மாற்றிதர  வேண்டுகிறோம்
                          நன்றி !

                                                                                                        இப்படிக்கு ,

                                                                                                  L .சுந்தரராமன்
                                                                                                            தலைவர்

Monday, 15 June 2015

Sulochana amma ninaivu naal

                                                   
                             இன்று அம்மாவின் நினைவு நாள்

                                     இருக்கின்றாய் அம்மா நீ!

       பாண்டுரங்கனைப் பார்த்த
               பரவசத்தில் பறந்து விட்டாயா
       எங்களை விட்டு ! உன்
               நாட் குறிப்பேட்டை  பார்த்தோம்
       கடைசி நாள் குறிப்பைக் கண்டு
               அதிர்ந்தோம் !அதிசயித்தோம்!
       ஆம் !நீ எழுதிய கடைசி
                வார்த்தை ஓய்வு !
       இதர நாட்களில் இல்லை
                இந்த வார்த்தை ஓய்வு!
        அது நிரந்தர ஓய்வு என்று
                தெரிந்திருந்தால் நிச்சயம்
       எழுதி இருக்கமாட்டாய்போலும் !
       எங்களின் சுமை தாங்கியே!
                  பாரம் சுமக்க முடியாமல்
        ஓய்வெடுக்க சென்றாயா!
                  இனி எங்கு இறக்கி
       வைப்போம்,  எங்கள் பாரத்தை!
                 புரட்டிப் பார்த்தேன்
        உன் சிறு கதைத் தொகுப்பை!
                  உன் கதைகளின் தலைப்பு !
        அது கண்டு ஏற்பட்டது திகைப்பு !
                  புரிந்தது உன் வாழ்வின் தத்துவம் !

        அப்பாவிற்கும் பிள்ளைகளுக்கும்
                 அப்பாவிற்கு பிறகு பிள்ளைகளுக்குள்
         "பாலம்" ஆகா இருந்தாய் நீ !
                   அறுவை சிகிச்சை வெற்றி !
         ஆனால் நீ இல்லாமல்
                    வெற்றிடம் இன்று
          "கைக்கு எட்டியது " வாய்க்கு
                    எட்ட வில்லை என்பது இதுதானோ !
          நீ எங்கு சென்றாலும்
                  வருவோம் உன்னுடன்!
        இப்போதும் வர விருப்பம்
                ஆனால் முடியவில்லை
       "கடமை அழைக்கிறது" எங்களை !
                 உனக்குச் செய்ய
        மனைவி  மக்களுக்கு செய்ய !
                வரவில்லை அதனால்!

        எட்டாம் நாள் காரியத்தில்
                காட்சி அருகில் கண்டவுடன்
       "மனம் தெளிந்தது " எங்களுக்கு!
                " உயிர் பறவை " உன்
         உடலைவிட்டு பறந்தவுடன்
                 "அவள் எங்கே " என்று
       தேடினோம் வாடினோம்!
                 "ப்ராப்தம் " எங்களுக்கு
       இல்லை போலும் !உன்னுடன்
                வருடம் பல சேர்ந்து வாழ !
       உன்னை நினைத்து வழிபட்ட
                முதல் நாள் வந்தாயே !
       "பேபி ஷோ " பெண் குழந்தை
                வடிவத்தில் !பெற்றாயே
       நாங்கள் தந்த இனிப்பை !
               சென்றாயே சிரித்த வண்ணம் !
     "அன்னை அருள் " என்றும்
                உண்டு எங்களுக்கென்று
     குறிப்பால் உணர்த்தியவளே !
               எங்கள் பெண் தெய்வமே !

     அம்மா!இறக்கவில்லை நீ !
              இருக்கின்றாய் ! இருப்பாய்
     என்றென்றும் எங்களுடன் !
             "சுந்தர் என் கண்மணி " என்பாயே
     இனி என்றும் எங்களின்
              கண்மணி நீ தானம்மா !
    இருக்கின்றாய் அம்மா நீ!


                                                                        அன்புடன்
                                                                     L .சுந்தரராமன்
      
                











1

Monday, 19 January 2015


                                                        மகா பெரியவா!         
             என் மகன் திருமணம் மூன்று மாதங்களுக்கு முன்பு சிறப்பாக நடை பெற்றது.செப்டம்பர் 16ஆம் தேதிதான் இரு வீட்டார் சேர்ந்து 12-12-2013 திருமணம் செய்ய முடிவெடுத்தோம் .உடனடியாக சத்திரம் தேடினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.ஒரு சிலர் டிசம்பர் 2014லுக்கா வேண்டும் என்று நகைத்தார்கள் .டிசம்பர் பனிரெண்டாம் தேதியை விட்டால் வேறு தேதி தற்போதைக்கு இல்லை என்ற நிலையில் சத்திரம் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது .
             செப்டம்பர் 19ஆம் அன்று இரவு என் தங்கை கணவரிடம் மறுநாள் பரங்கிமலை பகுதியில் உள்ள சில சத்திரங்களுக்கு சென்று பார்க்கலாம் என்று கூறினேன்.அவரும் சரி என்றார்.ஒரு மணி நேரத்தில்   என் தங்கை கணவர் கூப்பிடு 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' மண்டபம் காலியாக இருப்பதாக அதன் உரிமையாளர் சொன்னதாக கூறினார்.மேலும் ,என் தங்கைதான், நான் பேசியபோது ஹாலில் மாட்டியிருந்த மகா பெரியவா படத்தை பார்த்தவண்ணம் பெரியவா பேர்ல இருக்கும் 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' கிடைக்குமான்னு பாருங்களேன் என்று சொன்னதாகவும், உடனே உரிமையாளருக்கு போன் பண்ணி அவர் வரச் சொன்னதையும் கூறினார்,என் தங்கைகணவர்.
              மறுநாள் முதல வேலையாக 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்'சென்று உரிமையாளரிடம் பேசி அட்வான்ஸ் கொடுக்கும் நேரத்தில் மண்டப மேனேஜர் உரிமையாளரிடம் ஓடி வந்து 'சார் ,ஒரு தவறு நடந்து விட்டது 'டிசம்பர் 11ஆம் தேதி ஒரு விழாவிற்கு அட்வான்ஸ் வங்கி விட்டேன் ;நோட்டீஸ் போர்டு சார்ட்டில் குறிக்க மறந்து விட்டேன் .எனவே டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மண்டபம்  கல்யாணத்திற்கு கொடுக்க வாய்ப்பில்லை' என்று கூறினார்.கைக்கு எட்டியது வாய்க்கு  எட்டவில்லையே என்று வருத்தப்பட்டு அடுத்து என்ன செய்வது என்று திகைத்து உரிமையாளரிடம் எதாவது அட்ஜஸ்ட் பண்ணி டிசம்பர் 12ஆம் தேதி கல்யாணம் நடக்க வழி சொல்லுங்கள் என கூறினோம் நான் ,என் தங்கை கணவர் மற்றும் என் சம்பந்தி.அவர் தயங்கியபடி 'சார் தப்பு நடந்து போச்சு ;உங்களுக்கு ஆட்சேபணை இல்லா விட்டால் அருகில் ஒரு மண்டபம் கட்டி கொண்டு இருக்கிறார்கள் ;நவம்பர் மாதம் ரெடி ஆகிவிடும் ;நம்ம கல்யாணம் டிசம்பருக்குள் பக்காவா ரெடி ஆகிவிடும்;பார்க்கலாமா 'என்றார் .அவரே தன் காரில் எங்கள் மூவரையும் அழைத்து சென்று காட்டினார்  பாருங்கள் 'ஆனந்த மஹால்' மண்டபத்தை!அசந்து விட்டோம் நாங்கள்!
              உள்ளே நுழைந்தவுடன் அவர் 'சார்,உங்க வீட்டு  கல்யாணம் இங்க தான்;  அட்வான்ஸ் எடுங்க 'என்று கூற உடனே ஒரு 500 ரூபா தாளை எடுத்துக்கொடுத்தேன் நான்.A /C ரூம் ,A /C முஹுர்த்த ஹால் ,A /C டைனிங்  ஹால் என்று எங்கள் அனைவருக்கும் பிடித்து விட்டது..எங்களை இங்கு அழைத்து வந்த 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' உரிமையாளருக்கும் எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.அந்த உரிமையாளர் அறுசுவை அரசு திரு .கணேசன் அவர்கள்! அன்று மதிய உணவு எங்களுக்கு அவர் வாங்கிதர ,அதிலிருந்து ஸ்வீட்டை என் சம்பந்தி எனக்கும் என் தங்கை கணவருக்கும் ஊட்டிவிட்டு கட்டி பிடித்தபொழுது எங்கள் மூவரின் கண்களிலும் ஆனந்தக்  கண்ணீர்!
              அப்புறமென்ன!கிடுகிடு என மண்டப அட்வான்ஸ் கொடுக்கும்போது பார்த்தால் ஆனந்த மஹால் ஓனர் என் தங்கை கணவருக்கு மிகவும் தெரிந்த நண்பர்.
                1991 இல் என் மகன் உபனயனத்திற்கு 'ஏலக்காய்' மாலை கொடுத்து ஆசிர்வாதம் செய்தவர் மகா பெரியவா.இப்போது அவனின் திருமணத்திற்கு
'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' காலியாக இருப்பதாக வரச் சொல்லி (முதல் நாள் இரவே காலி இல்லை என்று தெரிந்திருந்தால் அங்கு செல்ல வாய்பிரிந்திருக்காது) ஆனந்த மகாலை காட்டிக் கொடுத்து திருமணத்தை நடத்திக் கொடுத்திருக்கிறார் வாழும் தெய்வம் மகா பெரியவா!
               அறுசுவை அரசு திரு .கணேசன்அவர்களின் சமையலுடன்
திரு.நித்யானந்தம் அவர்களின் ஆனந்த மகாலில் மகா பெரியவா  ஆசிர்வாதத்துடன் 12-12-2014 அன்று சிறப்பாக நடை பெற்றது என் மகன் திருமணம்!