C M W A /B U S /2015 26-7-2015
Sir,
பொருள் : 500A மற்றும் M 18G ரூட் டில் சிறிய மாற்றம் பற்றி
சாதரணமாக ஒரு பஸ் எந்த ரூட் வழியாக செல்கிறதோ ,அதே ரூட்டில் தான் திரும்பி ரிட்டர்ன் ஆகும்.
ஆனால் ஹஸ்தினாபுரம் to செங்கல்பெட் செல்லும் 500A மற்றும் ஹஸ்தினாபுரம் to கூடுவாஞ்சேரி செல்லும் M 18G ஆகிய பஸ் ஹஸ்தினபுரத்தில் இருந்து செல்லும் போது சிட்லபாக்கம் பேரூராட்சி, சானடோரியம் மேம்பாலம் வழியாக செல்கிறது .ஆனால் செங்கல்பெட்டில் இருந்து .ஹஸ்தினாபுரம், கூடுவாஞ்சேரி to ஹஸ்தினாபுரம் வரும் போது
M I T மேம்பாலம்,R P ரோடு வழியாக ஹஸ்தினாபுரம் சென்று அடைகிறது .இதற்கு முக்கிய காரணம், MEPZ அருகில் G S T ரோட்டில் பயணிகளுக்கு சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைத்த பிறகு, பேருந்துகள் வலது புறம் திரும்பி சானடோரியம் மேம்பாலம் செல்லும்வழியை அடைத்துவிட்டதுதான். இதனால் சிட்லபாக்கம் பேரூராட்சி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறும் சிட்லபாக்கம் பயணிகள் ஹஸ்தினாபுரம் சென்று அங்கிருந்து வேறு பஸ் மூலம் சிட்லபாக்கம் வர வேண்டயுள்ளது .இதனால் கூடுதல் நேரம் கூடுதல் பணம் செலவாகிறது.
எனவே 500A மற்றும் M 18G பஸ்களை MIT மேம்பாலம் ஏறி U TURN அடித்து சானடோரியம் மேம்பாலம் வழியாக வரச் செய்து ஹஸ்தினாபுரம் to செங்கல்பெட் ,ஹஸ்தினாபுரம் to கூடுவாஞ்சேரி போகும்போதும், செங்கல்பெட்டில் to ஹஸ்தினாபுரம்,கூடுவாஞ்சேரி to ஹஸ்தினாபுரம் வரும்போதும் சிட்லபாக்கம் பேரூராட்சி வழியாக செல்லும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் .( தற்போது S 8 பஸ்சும் ,. அண்ணா பேருந்து நிலையதிலிருந்து (MEPZ BUS STAND ) கிளம்பும் அனைத்து தாம்பரம் மார்க்கம் பேருந்துகளும் MIT மேம்பாலம் ஏறி U TURN அடித்து செல்கின்றன.எனவே 500A மற்றும் M 18G பஸ்கள் இம்மாதிரி செல்ல எந்த தடையும் இல்லை .).
மேற் கூறிய சிறிய மாற்றத்தால் கிடைக்கும் நன்மைகள் :
1.பஸ் ரூட் 500A ,M18G போகும்போதும், வரும்போதும்ஒரே வழியாக செல்லும்.
2.சிட்லபாக்கம் பயணிகளின் நேரம் ,பணம் விரயம் ஆகாமல் தவிர்க்கலாம்.
3.இதனால் ஹஸ்தினாபுரம் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை .
எனவே தக்க நடவடிக்கை எடுத்து 500A மற்றும் M 18G ரூட்டை மேற்கண்டவாறு மாற்றிதர வேண்டுகிறோம்
நன்றி !
இப்படிக்கு ,
L .சுந்தரராமன்
தலைவர்