Monday, 15 June 2015

Sulochana amma ninaivu naal

                                                   
                             இன்று அம்மாவின் நினைவு நாள்

                                     இருக்கின்றாய் அம்மா நீ!

       பாண்டுரங்கனைப் பார்த்த
               பரவசத்தில் பறந்து விட்டாயா
       எங்களை விட்டு ! உன்
               நாட் குறிப்பேட்டை  பார்த்தோம்
       கடைசி நாள் குறிப்பைக் கண்டு
               அதிர்ந்தோம் !அதிசயித்தோம்!
       ஆம் !நீ எழுதிய கடைசி
                வார்த்தை ஓய்வு !
       இதர நாட்களில் இல்லை
                இந்த வார்த்தை ஓய்வு!
        அது நிரந்தர ஓய்வு என்று
                தெரிந்திருந்தால் நிச்சயம்
       எழுதி இருக்கமாட்டாய்போலும் !
       எங்களின் சுமை தாங்கியே!
                  பாரம் சுமக்க முடியாமல்
        ஓய்வெடுக்க சென்றாயா!
                  இனி எங்கு இறக்கி
       வைப்போம்,  எங்கள் பாரத்தை!
                 புரட்டிப் பார்த்தேன்
        உன் சிறு கதைத் தொகுப்பை!
                  உன் கதைகளின் தலைப்பு !
        அது கண்டு ஏற்பட்டது திகைப்பு !
                  புரிந்தது உன் வாழ்வின் தத்துவம் !

        அப்பாவிற்கும் பிள்ளைகளுக்கும்
                 அப்பாவிற்கு பிறகு பிள்ளைகளுக்குள்
         "பாலம்" ஆகா இருந்தாய் நீ !
                   அறுவை சிகிச்சை வெற்றி !
         ஆனால் நீ இல்லாமல்
                    வெற்றிடம் இன்று
          "கைக்கு எட்டியது " வாய்க்கு
                    எட்ட வில்லை என்பது இதுதானோ !
          நீ எங்கு சென்றாலும்
                  வருவோம் உன்னுடன்!
        இப்போதும் வர விருப்பம்
                ஆனால் முடியவில்லை
       "கடமை அழைக்கிறது" எங்களை !
                 உனக்குச் செய்ய
        மனைவி  மக்களுக்கு செய்ய !
                வரவில்லை அதனால்!

        எட்டாம் நாள் காரியத்தில்
                காட்சி அருகில் கண்டவுடன்
       "மனம் தெளிந்தது " எங்களுக்கு!
                " உயிர் பறவை " உன்
         உடலைவிட்டு பறந்தவுடன்
                 "அவள் எங்கே " என்று
       தேடினோம் வாடினோம்!
                 "ப்ராப்தம் " எங்களுக்கு
       இல்லை போலும் !உன்னுடன்
                வருடம் பல சேர்ந்து வாழ !
       உன்னை நினைத்து வழிபட்ட
                முதல் நாள் வந்தாயே !
       "பேபி ஷோ " பெண் குழந்தை
                வடிவத்தில் !பெற்றாயே
       நாங்கள் தந்த இனிப்பை !
               சென்றாயே சிரித்த வண்ணம் !
     "அன்னை அருள் " என்றும்
                உண்டு எங்களுக்கென்று
     குறிப்பால் உணர்த்தியவளே !
               எங்கள் பெண் தெய்வமே !

     அம்மா!இறக்கவில்லை நீ !
              இருக்கின்றாய் ! இருப்பாய்
     என்றென்றும் எங்களுடன் !
             "சுந்தர் என் கண்மணி " என்பாயே
     இனி என்றும் எங்களின்
              கண்மணி நீ தானம்மா !
    இருக்கின்றாய் அம்மா நீ!


                                                                        அன்புடன்
                                                                     L .சுந்தரராமன்
      
                











1