Thursday, 29 September 2016

Three narasimhar darisanam in one day.

                                 ஒரே நாளில்  மூன்று நரசிம்மர்  தரிசனம்         
பல வருடங்களாக ஒரே நாளில்  தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்த மூன்று நரசிம்மர்  தரிசனம் சமீபத்தில் கிடைக்கப் பெற்றோம் .ஆம்.சிங்கர்குடி அல்லது சிங்கிரிகுடி அல்லது அபிஷேகப்பாக்கம் நரசிம்மர்,பூவரசன்குப்பம் நரசிம்மர் மற்றும் பரிக்கல் நரசிம்மர் ஆகிய மூன்று நரசிம்மர் கோயில் தரிசனமே அது .
காலையில் 6.30 மணிக்கு வீட்டில் இருந்து காரில் கிளம்பி ,திண்டிவனத்தில் சிற்றுண்டி முடித்து பாண்டிச்சேரி மணக்குள விநாயகரை தரிசித்து ,பாண்டிச்சேரி--கடலூர் ரோட்டில் தவளக்குப்பம் அடைந்து வலது பக்கம் திரும்பி அபிஷேகப்பாக்கம் வழியாக சிங்கர்குடி நரசிம்மர் கோயில் 10 மணிக்கு சென்றோம் .இங்குள்ள உக்கிர நரசிம்மரை (16 கைகளுடன்  இரணியனை வதம் செய்த கோலம்) தரிசித்து சுமார் 11 மணிக்கு கிளம்பினோம்.(0413-2618759)
மீண்டும்  அபிஷேகப்பாக்கம் மெயின் ரோடு வந்து மேலும் வலது பக்க சாலையில்  பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் விரைந்தோம்.சுமார் 45 நிமிட பயணம்.பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் 12.30 வரை திறந்திருக்கும் .நாங்கள் சென்ற போது மேனி 11.45.அருமையான அமர்ந்த திருக்கோலம்.நாங்கள் சென்ற அன்று திருமஞ்சனம் நடந்ததால் சிறிது நேரம்  பொது தரிசன வரிசையில் நின்றோம் .தரிசனம் முடிந்து
1 மணிக்கு வெளியில் வந்தோம் (0413-2698191,ஸ்ரீ.பார்த்தசாரதி பட்டர் 9443959995)
பரிக்கல் கோயில் 4 மணிக்கு தான் திறக்கும் .அதனால் பண்ருட்டி வந்து மதிய உணவு உண்டு சிறிது ஓய்வுக்கு பிறகு 3.30இக்கு பரிக்கல் கிளம்பினோம் (பூவரசன் குப்பத்தில் இருந்து விழுப்புரம் வந்து உணவுக்குப்பின்னும் பரிக்கல் செல்லலாம்).பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சாந்த நரசிம்மர் ;பிரார்த்தனை ஸ்தலம் .அருமையான அமர்ந்த திருக்கோலம் .பிரதக்ஷிணம் வரும் ப்ராகாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு முன்பு நெல் பரப்பி நம் வேண்டுதலை எழுதி ஆஞ்சநேயரை 16 முறை வலம் வர சொல்கிறார் அன்று இருந்த ராகவா பட்டாச்சார்யார் (.9943934152.).மேலும் அவர் நாங்கள் வந்தது போல் முதலில் சிங்கர்குடி உக்கிர நரசிம்மர் ,பின்பு பூவரசன்குப்பம் உக்கிரம் தணிந்த லட்சுமி நரசிம்மர், பரிக்கல் சாந்த நரசிம்மர் என்ற வரிசையில் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். அங்கிருந்து மூன்று நரசிம்மரை ஒரே நாளில் தரிசித்த மகிழ்ச்சியுடன் விழுப்புரம்,திண்டிவனம்,செங்கல்பட்டு வழியாக இல்லம் வந்தடைந்தோம்.

                                                                                 L .சுந்தரராமன் ,சிட்லபாக்கம்
                                                                                                    9445066061

Friday, 10 June 2016

TEMPLES IN TIRUVADISOOLAM,Near Chinglepet, Tamilnadu



                    திருவடிசூலம் கோயில்கள் --- ( Temples in Tiruvadisoolam )
                               சென்னைக்கு அருகில் செங்கல்பட்டிலிருந்து 8 KM  தொலைவில் உள்ளது திருவடிசூலம் என்ற கிராமம்..இக்கிராமத்தில் புராதனமான ஞானபுரீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது.மேலும் இக்கோயிலில் இருந்து இரண்டு மூன்று கிலோ மீட்டருக்குள் அருகருகே தற்போது புதிதாக பைரவவர் ,தக்ஷினாமுர்த்தி தியான மண்டபத்துடன் அமைந்த கோயில், 51அடி உயர கருமாரியம்மன் கோயில் மற்றும் பிரம்மாண்ட திருவேங்கடமுடையான்  கோயில்கள் அமைத்துள்ளன .
                                 நாங்கள் (9-6-2016 அன்று) கார் மூலம் மாலை 3.30PM தாம்பரத்தில் இருந்து கிளம்பி GST ரோட்டில் மறைமலை நகருக்கு அடுத்து வரும் மகேந்திரா சிட்டி ரோடில் ( It is on the left side of GST  road ) பயணம் செய்து  மகேந்திரா சிட்டி ரோடில் பின் கேட் அருகில் PARKAR  கம்பெனி தாண்டி இடது பக்க சாலையில் சென்றோம் .இந்த சாலை முடியும் இடத்தில பைரவர் கோயில் செல்லும் வழி போர்டு வைக்கப்பட்டு உள்ளது..அதனை பின்பற்றி சென்று கோயிலை அடைந்தோம்.(May be about 5-6 KM from GST road )
                                  அருமையான சுற்றுச் சூழல் .ஆகாயம் போல் அமைந்த விட்டதுடன் கூடிய கோயிலின் உள்ளே 12 ராசிகளை குறிக்கும் 12 படிகள் ஏறி மேடையில் ஒருபுறம் சிவன் மறுபுறம் பைரவர் பகவானை வழிபட்டோம்
பின்பு தியானமண்டபம் வந்து அமர்ந்து அருமையான .தக்ஷினாமுர்த்தி முன்பு சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யலாம்.முடிந்தால் நீலநிற ஆடை அணிந்து ,அன்ன தானத்துக்கு அரிசி (5kg  or  10kg or முடிந்த அளவு ) எடுத்து செல்லலாம். இயற்கை எழில் சூழ்ந்த இவ்விடம் மிகவும் அமைதியாக உள்ளது.( M :9940392913)
                                 இக் கோயிலிலிருந்து வெளியே வந்து இடப்புறமாக உள்ள சாலையில் 1-2 km சென்று (இங்கு நோட்டீஸ் போர்டு உள்ளது) 51 அடி உயர கருமாரியம்மன் மற்றும் திருவேங்கடமுடையான் கோயில் அடைந்தோம் .கூட்டமில்லாத ,ஜருகண்டி இல்லாத, அருமையான தரிசனம் .மிக உயரமான பெருமாள்.குருக்கள் நன்கு கோயிலை பற்றி கூறுகிறார் .மனதுக்கு ரம்யமான ஒரு இடம்.(பட்டாச்சாரியார் Sri .R .அனந்தக்ருஷ்னன் 9159252448)
                                 இக் கோயிலிலிருந்து வெளியே வந்து வலது புற சாலையில் திரும்பி சிறுது தூரம் சென்று மீண்டும் வலது புற சாலையில் திருவடிசூலம் சிவன் கோயிலை அடைந்தோம்.மிகவும் புராதனமான கோயில்.குரங்கு கூட்டம் எங்களை வரவேற்றது.இருக்கும் ஒரே பொட்டி கடையில் பூ வாங்கி கொண்டு குரங்குகளிடம் சிக்காமல் கோயில் உள்ளே சென்று' பிறவி இடர் நீக்கும்'இடைசுரனாதர் என்கிற ஞானபுரீச்வரை தரிசித்து ,கோவர்தனாம்பிகை அம்பாளையும் தரிசித்து மன நிறைவுடன் வெளியே வந்தோம்.
(குருக்கள் .M: 9444948937)
                                 இங்கிருந்து செங்கல்பட்டு -திருபோரூர் மெயின் ரோடு அடைந்து (1 km  from sivan temple ) செங்கல்பட்டு வந்து தாம்பரம் வந்து சேர்ந்தோம் சுமார் 8-30 மணி அளவில்.
                                 கூடியவரையில் இரவு 7  மணிக்குள் தரிசனம் முடித்து திரும்புவது நல்லது.கார் பயணமாக இருந்தால் நேரம் மிச்சமாகும்.மிக குறைந்த அளவு பஸ்களே இருக்கும் போல் தோன்றுகிறது.

                                                                                                      L .சுந்தரராமன்
                                                                                                        சிட்லபாக்கம்
                                                                                                                9445066061
 
                                                                                                   
                                                                               .
                               



Wednesday, 23 March 2016

kumbakonam 2016 visit temple brief



                                                          கும்பகோணம் கோவில்
1.கைலாசநாதர் கோவில் திங்களூர் நவக்ரஹ கோவில்களில் சந்திரனுக்கு உண்டானது.சந்திரனுக்கே சஞ்சலம்/சங்கடம் நீங்கிய ஸ்தலம.கும்பகோணத்தில் இருந்து 15 km .
2.தியாகப்ரம்மம் தியாகராஜர் ஜீவா சமாதி மற்றும் ஐயாறப்பர் என்ற பஞ்ச நதிதீஸ்வரர் --அறம் வளர்த்த நாயகி என்ற தர்ம சம்வர்தினி கோவில் திருவையாறு.
3.வசிஷ்டேஷ்வேர் கோவில்-திட்டை -தஞ்சாவூர் அருகில் : வசிஷ்டேச்வர் என்ற தான்தோன்றி ஈஸ்வரர் -உலகநாயகி என்ற மங்களாம்பிகை .குரு பகவான் தனி சன்னதியில் ஈஸ்வரனுக்கும் அம்பிகைக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக அருள் பாலிக்கிறார்.
4.இங்கிருந்து சற்று தொலைவில் புண்ணை நல்லூர் மாரியாம்மன்  கோவில் இருக்கிறது.இந்த கோவிலுக்கு பின்புறம் அழகிய கோதண்டராமர் கோவில் உள்ளது.
5.சுவாமிமலை முருகன் கோவில் கும்பகோணம் அருகில் ,திருவலஞ்சுழி விநாயகர்(கடல் நுரையால் ஆனா விநாயகர்) மற்றும் பட்டீஸ்வரம் துர்கையம்மன் தேனுபுரீஸ்வரர் ஆலயம்.(சுவாமிமலையில் இருந்து 3km ).
6.இதுவரை நாங்கள் பார்க்காத கோவில் :அகிலாண்டேஸ்வரி -அகத்தீஸ்வர கோவில் ,கருவளர்சேரி ,கும்பகோணம் அருகில்.வலங்கைமான் ஆலங்குடி செல்லும் வழியில் கும்பகோணத்தில் இருந்து 7km .பட்டேஸ்வரத்தில் இருந்தும் செல்லலாம் .தம்பதிகள் குழந்தை வேண்டி கரு உருவாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் ஸ்தலம்.கணவன்-மனைவியாக சென்று வரவேண்டிய கோவில்.எனது நண்பர் M .S சுந்தரம் சொல்ல நாங்கள் சென்று வந்தோம்.
7. இதுவரை நாங்கள் பார்க்காத கோவில் :சறகுனேஸ்வரர்--சர்வாங்க நாயகி கோவில்.ஈஸ்வரர் ஸ்வயம்பு மூர்த்தி .அம்பாள் ஐந்தரை அடி உயரத்துடன் அருள் பாலிக்கிறார் .இது ஒரு முக்தி ஸ்தலம் .'கரு இலி ' என்பது மருவி தற்போது கருவிலி என்று உள்ளது.இங்கு வந்து வழி பட்டவர்களுக்கு மீண்டும் பிறவி இல்லை என்பதுஐதீகம் .அதாவது எந்த கருவில் இருந்தும் நாம் உருவாக மாட்டோம் என்று நம்பிக்ககை.கோவிலுக்கு எதிரில் அழகிய நீர் நிறைந்த குளம்.கும்பகோணம் சோழன் வண்டியில் செல்லும் போது ஒரு பெரியவர் சொல்லி இந்த கோவிலுக்கு சென்று வந்தோம்.கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் வழியாக திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் பாதையில் இந்த ஸ்தலம்  உள்ளது.குருக்கள் ஸ்ரீ குமார் No 9962711005.
8. இதுவரை நாங்கள் பார்க்காத கோவில் :திருவீழிமிழலை கோவில் .கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் வழியாக திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் பாதையில் கூந்தலூர் ,இருவாஞ்செரி தென்கரை அருகில் இந்த ஸ்தலம் உள்ளது.இறைவன் பெயர் விழிநாதர்-- அம்பாள் பெயர் சுந்தரகுசாம்பிகை
இங்கிருந்து அச்சுதமங்கலம் வழியாக வாஞ்சிநாதர் --மங்களநாயகி ஸ்ரீவாஞ்சியம் கோவில்.செல்லலாம்.இங்கு யமதர்மராஜனுக்கு தனி சன்னதி உள்ளது.முதலில் இவரை தரிசித்து பின்புதான் ஈஸ்வரன்,அம்பாளை வழிபட வேண்டும் .கருவிலி (முக்தி ஸ்தலம் ) தரிசனம் முடித்து தொடர்ச்சியாக ஸ்ரீவாஞ்சியம் யமதர்மராஜாவை தரிசித்து பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு முக்தி பெறலாம்.
9.கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம் ராகு -கேது பரிகார ஸ்தலம். எனது நண்பர் V .ஸ்ரீனிவாசன் சொல்ல திருநாகேஸ்வரம் ரயில்நிலையம் அருகில் உள்ள, இது வரை நாங்கள் பார்க்காத, புராதனமான தேய்பெருமானல்லூர் சிவன் கோவில்.இங்கு ருத்ராக் ஷா ஈஸ்வரன் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார் .அம்பாள் பெயர் வேதாந்த நாயகி .இதுவும் ஒரு முக்தி ஸ்தலம்
                                                         நாமக்கல் கோவில்
1.கடந்த ஞாயிறு அன்று , கரூர் தான்தோன்றிமலை .கல்யாண வேங்கடரமண கோவில் (கரூரில் இருந்து 4km ), பேருந்து நிலையத்தின் வெகு அருகில் (ஆட்டோ தேவை இல்லை)உள்ள அலங்கார நாயகி உடனுறை கல்யாண பசுபதிஈஸ்வரர் கோவில் ,நாமக்கல் ஆஞ்சநேயர், லக்ஷ்மி நரசிம்ஹ  சுவாமி  ஆகியோரை தரிசனம் செய்யும் பாக்யம் கிடைத்தது.