ஒரே நாளில் மூன்று நரசிம்மர் தரிசனம்
பல வருடங்களாக ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்த மூன்று நரசிம்மர் தரிசனம் சமீபத்தில் கிடைக்கப் பெற்றோம் .ஆம்.சிங்கர்குடி அல்லது சிங்கிரிகுடி அல்லது அபிஷேகப்பாக்கம் நரசிம்மர்,பூவரசன்குப்பம் நரசிம்மர் மற்றும் பரிக்கல் நரசிம்மர் ஆகிய மூன்று நரசிம்மர் கோயில் தரிசனமே அது .
காலையில் 6.30 மணிக்கு வீட்டில் இருந்து காரில் கிளம்பி ,திண்டிவனத்தில் சிற்றுண்டி முடித்து பாண்டிச்சேரி மணக்குள விநாயகரை தரிசித்து ,பாண்டிச்சேரி--கடலூர் ரோட்டில் தவளக்குப்பம் அடைந்து வலது பக்கம் திரும்பி அபிஷேகப்பாக்கம் வழியாக சிங்கர்குடி நரசிம்மர் கோயில் 10 மணிக்கு சென்றோம் .இங்குள்ள உக்கிர நரசிம்மரை (16 கைகளுடன் இரணியனை வதம் செய்த கோலம்) தரிசித்து சுமார் 11 மணிக்கு கிளம்பினோம்.(0413-2618759)
மீண்டும் அபிஷேகப்பாக்கம் மெயின் ரோடு வந்து மேலும் வலது பக்க சாலையில் பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் விரைந்தோம்.சுமார் 45 நிமிட பயணம்.பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் 12.30 வரை திறந்திருக்கும் .நாங்கள் சென்ற போது மேனி 11.45.அருமையான அமர்ந்த திருக்கோலம்.நாங்கள் சென்ற அன்று திருமஞ்சனம் நடந்ததால் சிறிது நேரம் பொது தரிசன வரிசையில் நின்றோம் .தரிசனம் முடிந்து
1 மணிக்கு வெளியில் வந்தோம் (0413-2698191,ஸ்ரீ.பார்த்தசாரதி பட்டர் 9443959995)
பரிக்கல் கோயில் 4 மணிக்கு தான் திறக்கும் .அதனால் பண்ருட்டி வந்து மதிய உணவு உண்டு சிறிது ஓய்வுக்கு பிறகு 3.30இக்கு பரிக்கல் கிளம்பினோம் (பூவரசன் குப்பத்தில் இருந்து விழுப்புரம் வந்து உணவுக்குப்பின்னும் பரிக்கல் செல்லலாம்).பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சாந்த நரசிம்மர் ;பிரார்த்தனை ஸ்தலம் .அருமையான அமர்ந்த திருக்கோலம் .பிரதக்ஷிணம் வரும் ப்ராகாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு முன்பு நெல் பரப்பி நம் வேண்டுதலை எழுதி ஆஞ்சநேயரை 16 முறை வலம் வர சொல்கிறார் அன்று இருந்த ராகவா பட்டாச்சார்யார் (.9943934152.).மேலும் அவர் நாங்கள் வந்தது போல் முதலில் சிங்கர்குடி உக்கிர நரசிம்மர் ,பின்பு பூவரசன்குப்பம் உக்கிரம் தணிந்த லட்சுமி நரசிம்மர், பரிக்கல் சாந்த நரசிம்மர் என்ற வரிசையில் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். அங்கிருந்து மூன்று நரசிம்மரை ஒரே நாளில் தரிசித்த மகிழ்ச்சியுடன் விழுப்புரம்,திண்டிவனம்,செங்கல்பட்டு வழியாக இல்லம் வந்தடைந்தோம்.
L .சுந்தரராமன் ,சிட்லபாக்கம்
9445066061
பல வருடங்களாக ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்த மூன்று நரசிம்மர் தரிசனம் சமீபத்தில் கிடைக்கப் பெற்றோம் .ஆம்.சிங்கர்குடி அல்லது சிங்கிரிகுடி அல்லது அபிஷேகப்பாக்கம் நரசிம்மர்,பூவரசன்குப்பம் நரசிம்மர் மற்றும் பரிக்கல் நரசிம்மர் ஆகிய மூன்று நரசிம்மர் கோயில் தரிசனமே அது .
காலையில் 6.30 மணிக்கு வீட்டில் இருந்து காரில் கிளம்பி ,திண்டிவனத்தில் சிற்றுண்டி முடித்து பாண்டிச்சேரி மணக்குள விநாயகரை தரிசித்து ,பாண்டிச்சேரி--கடலூர் ரோட்டில் தவளக்குப்பம் அடைந்து வலது பக்கம் திரும்பி அபிஷேகப்பாக்கம் வழியாக சிங்கர்குடி நரசிம்மர் கோயில் 10 மணிக்கு சென்றோம் .இங்குள்ள உக்கிர நரசிம்மரை (16 கைகளுடன் இரணியனை வதம் செய்த கோலம்) தரிசித்து சுமார் 11 மணிக்கு கிளம்பினோம்.(0413-2618759)
மீண்டும் அபிஷேகப்பாக்கம் மெயின் ரோடு வந்து மேலும் வலது பக்க சாலையில் பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் விரைந்தோம்.சுமார் 45 நிமிட பயணம்.பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் 12.30 வரை திறந்திருக்கும் .நாங்கள் சென்ற போது மேனி 11.45.அருமையான அமர்ந்த திருக்கோலம்.நாங்கள் சென்ற அன்று திருமஞ்சனம் நடந்ததால் சிறிது நேரம் பொது தரிசன வரிசையில் நின்றோம் .தரிசனம் முடிந்து
1 மணிக்கு வெளியில் வந்தோம் (0413-2698191,ஸ்ரீ.பார்த்தசாரதி பட்டர் 9443959995)
பரிக்கல் கோயில் 4 மணிக்கு தான் திறக்கும் .அதனால் பண்ருட்டி வந்து மதிய உணவு உண்டு சிறிது ஓய்வுக்கு பிறகு 3.30இக்கு பரிக்கல் கிளம்பினோம் (பூவரசன் குப்பத்தில் இருந்து விழுப்புரம் வந்து உணவுக்குப்பின்னும் பரிக்கல் செல்லலாம்).பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சாந்த நரசிம்மர் ;பிரார்த்தனை ஸ்தலம் .அருமையான அமர்ந்த திருக்கோலம் .பிரதக்ஷிணம் வரும் ப்ராகாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு முன்பு நெல் பரப்பி நம் வேண்டுதலை எழுதி ஆஞ்சநேயரை 16 முறை வலம் வர சொல்கிறார் அன்று இருந்த ராகவா பட்டாச்சார்யார் (.9943934152.).மேலும் அவர் நாங்கள் வந்தது போல் முதலில் சிங்கர்குடி உக்கிர நரசிம்மர் ,பின்பு பூவரசன்குப்பம் உக்கிரம் தணிந்த லட்சுமி நரசிம்மர், பரிக்கல் சாந்த நரசிம்மர் என்ற வரிசையில் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். அங்கிருந்து மூன்று நரசிம்மரை ஒரே நாளில் தரிசித்த மகிழ்ச்சியுடன் விழுப்புரம்,திண்டிவனம்,செங்கல்பட்டு வழியாக இல்லம் வந்தடைந்தோம்.
L .சுந்தரராமன் ,சிட்லபாக்கம்
9445066061
No comments:
Post a Comment